முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்


இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-
சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.
திரைப்பட திறனாய்வுக்கு தமிழில் ஒரு ஏடு (பக்கம் 10) என்ற பதிவில் காலத்தின் தேவையாக இருக்கும் தமிழ் ஏடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதன் பெயர் அகல்விழி. சினிமா, ஓவியம், புகைப்படக் கலைக்காக மலர்ந்த காலாண்டு இதழ். மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட இந்த உயர்தர ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தின் கருத்துக்களை கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கின்றார். நாம் காணாத சஞ்சிகைகள் பற்றிய தகவல்களும், அக்காலத்தில் அதன் ஆசிரியர் தலையங்கங்களில் அமைந்த கருத்துக்களையும் நாம் அவதானிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த ஆசிரியர் தலையங் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.
சினிமா பற்றிய புத்தகங்கள், விமர்சனங்கள், திரைப்பட விழாக்கள், திரைப்பட சங்கங்கள், சினிமா பத்திரிகைகள் அனைத்தும் இருந்தும் தமிழில் புதிய சினிமா உருவாகவில்லை. இதன் அடிப்படையை ஆராய்ந்தோமேயானால் நல்ல இயக்குனர்கள் இல்லாமற் போனதே இதற்கான காரணமாகும். தமிழ் நல்ல சினிமாக்கள் அனைத்துமே வணிக விதிகளுக்கும் ஊறிப்போன பழைய படிமங்களுக்கும் உட்பட்டவை.
இந்திய சினிமாத் துறை விடுத்து உலக அனைத்துலகத் திரைப்படங்களும் அதிக வரவேற்பு பெற்றவைகளாகும். 1996 இல் புது டில்லி அனைத்துலகத் திரைப்பட விழாவில் இந்தியப் பெண் நெறியாளர்களின் படங்களுடன், ஆசியாக் கண்டத்தின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் படங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாணம் என்ற சீன மொழிப் படம், ஊர்காவல் என்ற பீஜிங் மாநகரப் படம், சுதந்திரக் கும்பல் என்ற லெபனான் நாட்டுப் படம், நீல முக்காடு என்ற ஈரானியப் படம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அறிதற்கரிய தகவல்களை தன்னகத்தே சுமந்திருக்கும் இந்நூல் சினிமாத் துறையில் ஈடுபாடுள்ளவர்களின் வாசிப்புக்கு சிறந்த நூலாகும். நூலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!!!
நூல் - முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்
நூலின் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
ஈமெயில் - sivakumaranks@yahoo.com
kssivakumaran610@yahoo.com
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 100 இந்திய ரூபாய்
No comments:
Post a Comment