Wednesday, April 29, 2015

84. ‘‘தாலாட்டு’’ நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

‘‘தாலாட்டு’’ நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும்ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்டவர் மருதூரஜமால்தீன். இலக்கிய உலகில் மரபுக் கவிதைகள் மற்றும் உருவகக் கதைகளை எழுதுவதில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர்;. எம்.எம். ஜமால்தீன் (முஅய்யதி) என்ற இயற்பெயரை உடைய இவர; 15ஆண்டுகளாக வாளிப்பா ஜும்ஆப் பள்ளி வாசலில் பேஷ் இமாமாகக் கடமையாற்றி வருபவர்;.

புரவலர் புத்தகப் பூங்காவின் 10 ஆவது நூல் வெளியீடாக இவரது முதலாவது கவிதைத் தொகுதியான தடயங்கள் 2009 மே மாதத்தில் வெளிவந்தது. அதனைத் தொடர;ந்து இதுவரை மொத்தமாக 06 நூல்களை வெளியிட்டுள்ளார்;. தடயங்கள்ரமழான் ஸலவாத்கிழக்கின் பெருவௌ;ளக் காவியம்முஹம்மது (ஸல்) புகழ் மாலைஇஸ்லாமிய கீதங்கள்தாலாட்டு ஆகிய ஆறு நூல்களே அவையாகும்.

இவரது இலக்கியப் பணிகளுக்காக 2008 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ (சமூக ஜோதி) பட்டமும்> 2013 ஆம் ஆண்டு அகில இலங்கை கவிஞர்;கள் சம்மேளனத்தினால் காவிய பிரதீப (கவிச்சுடர்;) பட்டமும்விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்;.

ஒரு தாயின் தாலாட்டில் குழந்தையின் அழுகை தீர;ந்துவிடுகின்றது. அடம்பிடித்து விழித்திருக்கும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி சுகமான தூக்கத்தை அளிப்பது தாலாட்டாகும். ஒரு குழந்தை முதன்முதலாக சங்கீதமாகக் கேட்பதும் தாலாட்டையே ஆகும். தாலாட்டுப் பாடல்களைக் கொண்டே இந்த நூலை ஆக்கியிருக்கும் கவிஞர்குழந்தைகளுக்கான நற்பண்புகள்நல்லொழுக்கங்கள் போன்றவற்றையும் தாலாட்டினூடாகவே தந்திருக்கின்றமை சிறப்பாகும்.

தாலாட்டு என்ற இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலாபூஷணம் எஸ். முத்துமீரான் அவர;கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;.

‘‘வாழ்வின் தத்துவங்களையும்வரலாறுகளையும்சூட்சுமங்களையும் உலகில் சிறப்பாகவும்யதார்;த்தமாகவும் எடுத்தோதிக் கொண்டிருக்கும் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியங்களே முன்னிலை வகிக்கின்றன. நாட்டுப்புற இலக்கியங்கள்கலப்பில்லாததூய்மையான உண்மையின் பிம்பங்களாகும். அதிலும் அன்புக் கொடைகளில் விலைமதிப்பற்ற  கொடையென நாட்டுப்புற ஆய்வாளர்;கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்;. நெடிலோசை வடிவில் தாய்மார்;களினால் தங்கள் சேய்களை கண்மூடித் தூங்கச் செய்யும் இத்தாலாட்டுப் பாடல்கள் மூலம் பல வடிவங்களில் பாடப்பட்டிருந்தாலும் இதன் உண்மையான நோக்கம் குழந்தைகள் அமைதியாகத் தூங்கச் செய்வதேயாகும்.’’

தாலாட்டு என்ற இந்தத் தொகுதியில் 107 பாடலடிகள் அமையப் பெற்றுள்ளன.

பக்கம் 02 இல் உள்ள தாலாட்டு அடிகளில் இப்பூமியில் சிறப்பாக வாழ்வதற்குரிய வழிவகைகளை சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார்;. படைத்த இறைவனின் அருளைப் பெற்று பார;போற்றும் நல்லவனாக வாழ வேண்டுமென்றும்கலங்கரை விளக்கான கல்வியை நாட்டத்துடன் கற்று உயர்;ந்த தொழில் புரிய வேண்டும் என்றும் கூறி நிற்கின்றார்;. அத்துடன் உயிருக்கும் மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வது அவசியம் என்றும் குறிப்பிடுகின்றார்;. இறைவனின் சிந்தனை அற்றவர்;கள் பாவம் செய்வதற்குரிய சந்தர்;ப்பங்கள் அதிகமாகும். பாவம் செய்பவர்;களுக்கு நல்ல விடயங்களின்பால் ஈடுபாடு இருக்காது. கல்வியும்ஒழுக்கமும் எட்டாக் கனியாகவே ஆகிவிடும். எனவே முதலில் அவற்றில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆராரோ என் மகனே
ஆராய்ந்திவ் வுலகமிதில்
சீராய் இப்பு+மியிலே
சிறப்பாக நீ வளர;வாய்

வல்லோனருளாலே
வந்தாய் இவ்வுலகமதில்
நல்லோருதவி பெற்று
நல்லபடி நீ வளர;வாய்

கல்வியறிவைக் கற்று
கருத்தாய் ஒழுக்கமுடன்
எல்லோரும் போற்றிடவே
என் கண்ணே நீ வளர்;வாய்

ஒழுக்கம் தனை மேலாய்
உழுகிப் பணிவுடனே
அழுக்கான தீமை விட்டு
அனுதினமும் நீ வளர;வாய்

பக்கம் 07 இல் உள்ள அடிகளில் முதியோருக்கு உதவுதல்ஆசிரியர;களை மதித்தல் ஆகிய பண்புகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மைவிட வயதில் மூத்தவர;களுக்கு கண்ணியம் செலுத்த வேண்டும். அவர;கள் கூறும் நல்ல உபதேசங்களைக் கேட்க வேண்டும். மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல ஆசிரியர;களின் ஆசிகளைப் பெற்று, அவர;களின் சொற்படி நடந்துகொள்ள வேண்டும், அவர;கள் மகிழ்வுறும் விதமாக செயற்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

முதியோருக் குதவி செய்து
முன்னோனருளைப் பெற்று
மதிக்கும் நல்லாசான்களால்
மகிழ்வுறவே நீ வளர;வாய்

பக்கம் 09 இல் உள்ள அடிகளில் யாரையும் ஏமாற்றி வாழக் கூடாதென்றும்தீய பழக்கங்களான பொய்களவு ஆகியவற்றைப் புரியக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது. ஏழையாக வாழ்ந்தாலும் அடுத்தவர;களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது பெருங் குற்றமாகும். அதற்காக கோழையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது. ஒருவன் குட்டுப்பட்டுக்கொண்டே இருந்தால் முன்னேற விடமாட்டார;கள். எனவே துணிச்சலுடன் வாழ வேண்டுமென்றும்உண்மை கூறும் உத்தமனாய் வாழ வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாரமருதூர;ஜமால்தீன் அவர;கள்.

ஏழையாய் வாழ்ந்தாலும்
ஏமாற்றி சதிகள் செய்யும்
கோழையாய் வாழாமல்
குணக்குன்றாய் நீ வளர;வாய்

பொய் களவு மோசடிகள்
புரிந்த பெயரஇல்லாது
மெய்யுரைக்கும் சான்றோனாய்
மேன்மையுடன் நீ வளர;வாய்

பக்கம் 16 இல் உள்ள அடிகளில் திருக் குர;ஆனை மனனமிட்டுபடைத்த அல்லாஹ்விடம் பிரார;த்தனை செய்து வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் இணைத்து முஹம்மத் நபியவர;கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அல்குர;ஆன் மனனமிட்டு
அல்லாஹ்விடம் துஆயிறைஞ்சி
நல்ல நபி வாழ்வெடுத்து
நாநிலத்தில் நீ வளர;வாய்

இறைதூதரபோதனையே
இவ்வுலகில் இகழ்ந்து நின்றோர;
கறைபடிந்து வீழ்ந்த கதை
கற்றுணர;ந்து நீ வளர;வாய்

உலகக் கல்வி, ஆன்மீகம் சார;ந்த விடயங்களை உள்ளடக்கியதாக தாலாட்டு எனும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகக் கல்வியைப் போன்றே மார;க்கக் கல்வியும் மிக முக்கியமாகும். அனைத்து மதங்களும் நல்ல விடயங்களைச் செய்யுமாறே ஏவி நிற்கின்றன. ஆன்மீக உணர;வு இல்லாததன் காரணமாக பல கலாசார சீரழிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள்வதற்கு இவ்வாறான நூல்கள் மிகவும் துணை புரிகின்றன. நல்ல விடயங்களை வலியுறுத்துமுகமாக தாலாட்டு எனும் நூலை வெளியிட்ட கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - தாலாட்டு
நூல் வகை - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர; - மருதூரஜமால்தீன்
தொலைபேசி - 0775590611
வெளியீடு - தீன் ஜோதி இலக்கிய மன்றம்
விலை - 50 ரூபாய்

83. மரண வலிகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மரண வலிகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 40 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள கவிதை நூலே மரண வலிகள் தொகுதியாகும். இந்த கவிதை நூலின் ஆசிரியரஅலெக்ஸ் பரந்தாமன் ஆவார;. இவரஏற்கனவே இதே பதிப்பகத்தினூடாக அழுகைகள் நிரந்தரமில்லை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறுகியகால இடைவெளிக்குள் அலெக்ஸ் பரந்தாமனின் இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்து அவரது இலக்கிய ஆற்றலைதிறமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்தக் கவிதை நூலில் சிறியதும் பெரியதுமான 63 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. யுத்த காலத்தில் ஏற்பட்ட துயரங்களையும், கொடுமைகளையும், யுத்தத்தின் பின்னர;ஏற்பட்ட விளைவுகளையும். கஷ்டங்களையும் வெளிக்காட்டும் படியான கவிதைகளே நூல் முழுவதுமாக விரவிக் காணப்படுகின்றன. போரின் முகத்தைக் காட்டி நிற்கும் கண்ணாடியாகவே இந்த நூலைப் பார;க்கலாம்.

வலிமிகுந்த வாழ்வைச் சுமந்து போரினால் மண்குழிக்குள் வரலாறாகிப்போன மக்களுக்கே அலெக்ஸ் பரந்தாமன் தனது கவிதை நூலை சமர;ப்பணம் செய்துள்ளார;.

அலெக்ஸ் பரந்தாமன் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார;. ‘‘எமை விட்டுக் கடந்துபோன போரின் உச்சத்துள்நிகழ்ந்த அவல தரிசிப்பில்என்னுள் எழுந்த மனக்கொதிப்பின் வெளிப்பாடுகளே இத்தொகுப்புக்குள் குந்தியிருக்கும் கவிதைகளாகும். ஒரு காலம்எமக்கான சுதந்திர தனியிருப்புக்காக எனது பேனா எழுதிய கவிதைகள் ஏராளம்! போரியல் வாழக்கைக்குள் புரிபடாத மனம் எதிர;பாராத திருப்பங்களோடும் நடுக்கங்களோடும் போன எனது வாழ்வின் பயணம்இறுதியில் (முள்ளி வாய்க்காலில்) நிர;க்கதியாகி நின்றபோது முன்பு முனைப்போடு எழுதிய கவிதைகள் உட்பட பல படைப்புக்கள் அனைத்தும் என்முன்னே எனைப் பார;த்து கைகொட்டி நகைப்பது போன்ற உணர;வுக்குள் சிக்கிச்சிதறி... மனம் குமைந்து அழுதழுது.. அகதி முகாமில் சரணடைந்தது ஒரு வலி மிகுந்த வரலாறாகும். அதன்பின் இனி எதுவும் எழுதுவதில்லை... என்ற ஒருவித வெறுப்போடு இருந்தபோது, மறுக்கப்பட முடியாத நிகழ்வின் தரிசனங்கள் ம(i)றக்கப்பட்டு விடும் எனும் ஒரு சிந்தனை என்னுள் உந்தவேமீண்டும் எழுத ஆரம்பித்தேன்.’’

இனி அவரது 63 கவிதைகளில் ஒரு சில கவிதைகளின் வேதனை வெளிப்பாட்டைப் பார;ப்போம்.

அவர;களும் எனது கவிதையும் (பக்கம் 01) என்ற கவிதை உயிர;களைஉடமைகளைப் பறிகொடுத்தவர;களின் இதய வேதனையை இயம்பியிருக்கின்றது. துன்பத்தின்போது கூடவே இருந்து ஆறுதல் கூறியவர;கள் இரத்தம் சிந்திஉடல் சிதறி இறந்துபோனதை கவிதை அழகாக சுட்டிக் காட்டியிருக்கின்றது.

எல்லோருக்குமான அவலம்தான்
முடிவில் அவர;களுக்குமாயிற்று
வாழவேண்டுமென்ற துளிர;ப்பும் துடிப்பும்
அவர;களை வழிமாற்றி
இன்னோரிடத்திலிருக்க வைத்தது..
கைகொடுத்துதவியது கைவேலி நிலம்
இடறல்களிலிருந்து
எட்ட வந்துவிட்டதான மன உணர;வோடு
அவர;கள் இருந்தார;கள் ஆறுதலாக...

மரண வலிகளை உணராது
மண்மடியில் அப்படியே
சிதறிய உடல்களாய்..
சிந்திய இரத்தமாய்..
மூச்சிழந்து முகம் மறைந்து போனதை
இனியும் நான் எப்படி எழுதுவேன்
எனது கவிதையில்?

யுத்தம் ஓய்ந்த பின்பும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர;களின் அவல வாழ்வுதுளிர;க்குமோ? (பக்கம் 05) என்ற கவிதையில் பதிவாகியிருக்கின்றது. தமது உடமைகளை விட்டுக் கொடுத்தவர;கள்அதன் பின்னரும் தமது சொந்த வீடுகளுக்குள் குடியேற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டன. பதவிகளில் இருப்பவர;கள் தமது பதவிகளுக்காகவும்பேரபுகழுக்காகவும் பொய்களைக் கூறி தமது சகல காரியங்களை சாதித்துக் கொள்கின்றார;கள். அதனால் பொதுமக்களின் வாழ்வு அந்தரப்பட்ட நிலைமையிலேயே கழிகின்றது என்று இந்தக் கவிதை கூறி நிற்கின்றது.

போரஓய்ந்த பின்னிலையில் - வீடு
போய்ச்சேர வழியில்லை எங்கள்
ஊர;மனைகள் அழிந்த பின்பும்  - அங்கு
உழ்நுழையத் தெரியவில்லை ஆள
ஆரவந்து நன்மையென்ன - வாழ்வு
அவலமொரு தொடர;கதைதான் தங்கள்
பேரவாழ புகழோங்க - பொய்கள்
பேசுவதும் ஒரு கலைதான்!

அஸ்தமனத்துள் ஓரஅருணோதயம் (பக்கம் 15) என்ற கவிதையும் யுத்தம் பற்றியே பேசியிருக்கின்றது. காலம் விட்டுப்போன ரணங்களில் இன்னும் கசிந்துகொண்டிருக்கின்ற வாழ்வுத் துளிகள்பாதிக்கப்பட்டவர;களின் நிலைமை நன்றாக எடுத்துக் காட்டுகின்றன. செயற்பாடுகளை எல்லாம் முடக்கிப் போட்டுவருமானங்கள் யாவும் அடியோடு மறுக்கப்பட்டு வலுவிழந்தவர;களாய் அவர;களை மாற்றிப்போட்டது யுத்தம். இழந்து போனவற்றின் நினைவுகளின் வலிகளைத் தாங்கியபடி மீண்டும் புதிய வாழ்க்கையைத் தேடுகின்றார;கள் என்று கவிதையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கவிதை வரிகள் இதோ..

பிணங்கள் விழுந்த தரைமீது படர;கிறது.. சூரிய தேவனின் பின்மாலைப்பொழுதின் ஒளி.. காலம் அள்ளிச்சென்ற சில நினைவுகளைத் தேடுகின்றேன் கழிவிரக்கத்தோடு.. கூற்றுவன் பெயரால் குறிக்கோளற்ற செயற்பாடுகள்.. வாழ்க்கையைத் தின்றுமுடித்துவிட்டு.. இப்பொழுது ஏப்பம்விட்டு நிற்கின்றன ஏதுமறியாதனவாக.. இழப்புகளின் சுமைகளைத் தாங்கியபடி.. எங்கெங்கோ பரவலாய்.. புதிய முளைகளாக விட்டெழும் முகங்கள்.. மீண்டும் வீரியத்தைத்தேடி விரைகின்றன.. தம்வழியில் விளக்கம் தெரிந்தனவாய்..

இடம்பெயர;ந்து வந்தவர;களின் வாழ்க்கைக் கனவுகள் யாவும் சிதைந்து போன நிலையில் அவர;களின் வளங்களும் உடற் பலங்களும் அழிந்திருந்தன. நிஜங்களின் தரிசனங்களாக அவர;கள் கண்டவை எல்லாம் கொடுமையான போரின் தாக்கங்கள் மட்டுமேயாகும். தலைவிதிகளின் நிர;ணயிப்புக்கள் தலைகீழாக எழுதப்பட்ட அந்த நிலைமையை ஓரஅகதியின் துயரப்பாடல் (பக்கம் 19) என்ற கவிதை விளக்கியிருக்கின்றது.

இன்னல்கள் எத்தனை கண்டாச்சு - வாழ்வில்
இடப்பெயர;வுகள் பலவாச்சு
வண்ணக் கனவுகள் சிதைஞ்சாச்சு - பெற்ற
வளங்கள் அனைத்தும் இழந்தாச்சு!

ஊரின் முகங்கண்டு நாளாச்சு - போரால்
ஒடுங்கிய வாழ்வும் இருளாச்சு
ஏரி வயல்வளம் அழிந்தாச்சு - எந்தன்
இல்ல முற்றமெல்லாம் என்னாச்சு?

வடுக்கள் (பக்கம் 52) என்ற கவிதை உறவுக்கார பேரனின் ஞாபகங்களை மீட்டுவதாக அமைந்திருக்கின்றது. பிஞ்சு விரல்களால் ஸ்பரிசித்த நினைவுகளில் கவிஞரநெஞ்சம் நெகிழ்ந்து போகின்றார;. மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னாலும் பேரனை மறக்க முடியாமல் தவிக்கும் கவிஞரின் இதயத்து வேதனை வாசகர;களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது.
அந்தக் கவிதை பின்வருமாறு:

வருடமொரு நாளில் பங்குனி மாத அமாவாசைக்கு முந்திய தசமிதியில் வந்து போகிறது உன் சிரார;த்த நினைவு.. மறப்போம் மன்னிப்போம் என்று கூறுகிறார;கள்.. மன்னித்துவிட்டேன்.. ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. பேரன் என்ற உறவு முறையில் உன் பிஞ்சு விரல்களால் மூன்று வயதில் என் முகத்தைத் தடவி ஸ்பரிசித்த நினைவுகள் சிலது மட்டும் இப்பொழுதும் கூட நீரில் கல்லெறியப்பட்ட அலைகள் போல  ஷெல் விழுந்த ஓலைக் குடிசைக்குள் தீ திண்டு புலுண்டி உன் உடம்பு.. இப்பொழுதும் எரிகிறது உன் நினைவுகள் எனக்குள் மன்னித்துவிட்டேன் அவர;களை! ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. உன் நினைவுகளை..!

போரினால் பாதிக்கப்பட்டு, அதன் வலிகளை சுமந்து, அந்த வலிகளை, மனதின் வேதனைகளை மொழிபெயர;த்து கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் வெளிப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் பரந்தாமன் பாராட்டுக்குரியவர;. யுத்த காலத்தின் நிகழ்வுகளை அறிய இந்நூல் சிறந்த ஆவணமாகும். அவரது படைப்புக்களை இன்னும் எதிர;பார;த்து வாழ்த்துகிறேன்!!!

நூல் - மரண வலிகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர; - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 300 ரூபாய்