Sunday, October 18, 2015

85. ஆஷா நாயும் அவளும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஆஷா நாயும் அவளும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

போர்காலச் சூழலில் தோன்றும் படைப்புக்கள் அக்காலம் சார்ந்த நிலமைகளை மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டும். போரின்போது வெளிப்படுத்தப்படாத விடயங்கள் இன்று போரின் பின்னரான காலங்களில் படைப்புகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அக்கால சூழ்நிலையில் மக்கள் அனுபவித்த துன்பங்களை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

ஒவ்வொரு கணமும் உயிருக்காகப் போராடி, அடுத்த நிமிடம் வாழ்வோமா, சாவோமா என்ற நிலையில் இருக்கும்போதும், தாம் பட்ட துன்பங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று அவற்றை தத்ரூபமாகப் படைப்பாக்கும் திறமை நம்நாட்டில் பலருக்கு வாய்த்திருக்கின்து. அந்த வகையில் வள்ளுவர்புரம் யோ. புரட்சி தான் வாழ்ந்த சூழ்நிலையை தன் எழுத்துக்கள் மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய் என்பது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. அடுத்தது எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும் என்ற கவிதைத் தொகுதி. இந்தத் தொகுதியின் வெளியீட்டு விழா கடலில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆஷா நாயும் அவளும் என்ற சிறுகதை நூலினூடாக மீண்டும் வாசகரைச் சந்திக்கின்றார் யோ. புரட்சி. இந்த நூல் காட்டில் வைத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் அதிக ஆர்வமாக எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கவர் இவர். தன் எழுத்தாற்றல் மூலம் வாசகரின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

"இந்நூலில் உலாவரும் கதைகள் பத்திரிகைகளில் தவழ்ந்தபோது பாராட்டிய அநேகர்க்கு, அவற்றை எழுதி தபாலிடுவதற்கு நான் பட்ட பாடுகள் தெரிந்திட வாய்ப்பில்லை" என குறிப்பிடும் யோ. புரட்சி தன் தாயின் ஆசிச் செய்தியை தனது எல்லா நூல்களில் சேர்த்து வருவது குறிப்பிட்டு பாராட்டக்கூடியதொரு அம்சம் எனலாம்.

இந்நூலுக்கு கருத்துரை வழங்கியிருக்கும் வவூனிய+ர் இரா. உதயணன் அவர்கள் ~இந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு முதலில் என்னை ஒருவித மாற்றுச் சிந்தனைக்கு தள்ளியபோதும்இ படித்தபோதே அதன் மறுபக்கம் தெரிந்தது. ஆஷா நாயூம் அவளும் என்பதும் ஒரு காலத்தின் பதிவூ| என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இலண்டன் மற்றும் தமிழ் இலக்கிய நிறுவகம் வெளியிட்டிருக்கும் இத்தொகுதி பதினொரு கதைகளை 62 பக்கங்களில் உள்ளடக்கியிருக்கின்றது. இதில் காணப்படும் கதைகள் எல்லாம் சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் யூத்தகால சூழ்நிலைக்குள் வாசகரை கூட்டிச் செல்லும் அற்புதத்தையூம் கொண்டிருக்கின்றன.

காதல் என்ற மந்திரச் சொல் இன்று தந்திரச் சொல்லாக உருவெடுத்திருக்கின்றது. காதல் தெய்வீகமானது என்ற நிலைமை மாறி காதல் மாயையானது என்ற நிலை தற்போது உருவாகியிருக்கின்றது. காரணம் காதல்கள் இன்று காமத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றமைதான். எவ்வளவூதான் உயிருக்குயிராக காதலித்தபோதும் கல்யாணம் ஆகும் வரைக்கும் எல்லைமீறக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் ஒரு பெண்ணுக்குஇ சமூகத்தாலும்இ இயற்கையாலும் பாதிப்பு அதிகமாக ஏற்படுகின்றது. வலிந்து வலிந்து காதலிக்கும் சில ஆண்கள்இ காரியம் கைகூடியதும் ஒளிந்துக்கொள்கின்றார்கள். அவ்வாறானதொரு கதைப் பின்னணியை வைத்து எழுதப்பட்டிருப்பதே காதல் அவசரம் (பக்கம் 01) என்ற முதல் கதையாகும். வீட்டாரிடம் பொய்சொல்லவிட்டு காதலனுடன் ~மியூ+சிக் புரோகிராம்| செல்லும் பெண்இ இரவானதும் காதலனுடன் லொட்ஜுக்குச் செல்கின்றாள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கின்றது. பற்றாமல் வேறென்ன செய்யூம்? காதலி பொய்யாக தடுக்கின்றாள். ஆனால் காதலனின் "என்னை நம்பிக்கையில்லையா?" என்ற கேள்வி அவளுக்கு நம்பிக்கையைத் தர அவள் தன்னை அவனிடம் இழந்துவிடுகின்றாள். அந்த இரவில் செய்த தவறு சிலநாட்களில் வெளிச்சமாகிறது. அவன் குழந்தைஇ அவள் வயிற்றில் வளர்கிறது. ஆனால் அவனைக் காணோம். வெளிநாட்டுக்கு அவன் சென்றுவிடுகின்றான். அவளது வாழ்க்கை இருண்டு போகிறது. அவளோ வாழ்வதற்கு வழியின்றி தன் குழந்தையூடன் மகளிர் இல்லம் நோக்கிச் செல்வதாக கதை நிறைவடைகின்றது.

மாறுகிறாள் மனைவி (பக்கம் 14) என்ற சிறுகதை நகைச்சுவையாகவூம்இ படிப்பினையாகவூம் இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் கணவனை சந்தேகிக்கக் கூடாது. அவனது அன்பை ஏற்கப் பழக வேண்டும். கொஞ்ச நேரம் பிந்தி வீட்டுக்கு வந்தால் ~எவளுடன் வலிஞ்சிக்கிட்டு இருக்காரோ?| என்ற ஐயப்பாட்டுடன் மனைவி வாழக்கூடாது. பொதுவாகவே கணவன்மார் நேரத்துக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டும். காரணம் தனிமைப்பட்டு வீட்டுக்குள்ளே சிறைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் கணவனின் வருகையால்தான் சந்தோசப்படுகின்றார்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட பிந்திப்போனால் அதற்குரிய காரணத்தைக் கேட்டு அதற்கேற்றபடி மனைவி நடந்துகொள்ள வேண்டும் என இருபக்க நியாயத்தையூம் இக்கதை நன்கு உணர்த்தியிருக்கின்றது.

வேலைக்குப் போகும் பெண்களில் அநேகர் எதிர்கொள்ளும் பிரச்சினையை அழகாக எடுத்துக் காட்டுகின்றது ஆசையின் வலையில் (பக்கம் 33) என்ற சிறுகதை. மனேஜரின் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கு வருகின்றாள் சுபமலர் என்ற பெண். தனது தோழியின் தீய அறிவூரைக்கு இணங்க மனேஜரை வளைத்துப்போடுவதில் குறியாக இருக்கிறாள் சுபமலர். மனேஜரை கைக்குள் போட்டுக்கொண்டால் நல்லதொரு பதவி உயர்வை அடைந்துவிடலாம் என்ற பேரவா அவளுக்கு. மனேஜரும் சபலப் புத்திக்காரர். பைல்களைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே கையை உரசுவார். அதை சுபமலர் ஒரு சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தாள். அவளது சம்மதத்தைக் கண்ட மனேஜர் ஒருநாள் வெளியூ+ருக்கு வேலை விடயமாக் போவதாகக்கூறி அவளையூம் அழைத்துச் செல்கின்றார். அவரது ஆசை வாரத்தைகளுக்குக் காத்திருந்த சுபமலரும் சுலபமாகவே அவருக்கு தன்னை காணிக்கையாக்குகின்றாள். திடீரென சிலமோசடிகளின் பேரில் மனேஜர் தன் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றார். யாரை நம்பி கற்பினை இழந்தாளோ இன்று அவரே வேலையில்லாமல் தவிக்கின்றார் எனும்போது தீய அறிவூரை சொன்ன நண்பி மீது கடுங்கோபம் வருகிறது சுபமலருக்கு. பேராசை கூடாது என்றும்இ ஆசைக்காக கற்பை இழக்கக்கூடாதென்றும்இ தீய நண்பர்களின் தொடர்பு கூடாது என்றும் உணர்த்தியிருக்கின்றது இந்தக்கதை.

மகுடத்தலைப்பான ஆஷா நாயூம் அவளும் (பக்கம் 50) என்ற கதை சோகத்தை சுமந்திருக்கும் ஒரு கதையாகும். இந்தக்கதை வாசகரை நிச்சயம் யூத்தக்கால சூழ்நிலைக்கு இழுத்துச் செல்லும். மதுவின் கணவன் உட்பட பலர் ஷெல்வீச்சால் மடிந்து போகின்றார்கள். பொத்திப் பொத்திப் பாதுகாத்த குழந்தை ஆஷாவூம் இறுதியில் ஷெல்லடிக்குப் பலியாகின்றாள். கணவனதும்இ குழந்தையினதும் இறப்பை அடுத்தடுத்து கண்ட மது மயங்கி விழுகின்றாள். தற்போது அவளொரு அநாதை இல்லத்தில் பணிபுரிகின்றாள். தன்னையே சுற்றிச்சுற்றி வரும் ஒரு நாய்க்கு தன் மகளின் பெயரை வைத்திருப்பதுதான் மகுடத் தலைப்பாக இடப்பட்டிருக்கின்றது.

ஆஷா நாயூம் அவளும் கதையைப் போலவே யூத்தத்தில் பெற்றௌரை இழந்து குழந்தைகள் படும் அவஸ்தையை இரண்டு மொட்டுக்கள் விரிகின்றன (பக்கம் 18) என்ற கதையில் தரிசிக்க முடிகின்றது. இவ்வாறு சமூகத்தில் புரையோடிப் போயூள்ள விடயங்களை தன் எழுத்துக்களால் வெளிப்படுத்தி வரும் யோ. புரட்சிக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ஆஷா நாயூம் அவளும்
நூலாசிரியர் - யோ. புரட்சி
தொலைபேசி - 0775892351 / 0774641921
மின்னஞ்சல் - puratchi2100@gmail.com
வெளியீடு - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்
விலை - 220 ரூபாய்

No comments:

Post a Comment